சென்னை: தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், உயர்கல்வித் துறை சார்பில் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் 25 கோடியே 31 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தரைதளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்ட சிற்றுண்டிக் கட்டிடம், வேலூர் மாவட்டம், குடியாத்தம் திருமகள் ஆலை அரசுக் கல்லூரியில் 5 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 14 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டிடங்கள் என மொத்தம் 86.89 கோடி செலவில் கட்டப்படவுள்ள கல்விசார் கட்டிடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 134 கோடியே 15 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
The post உயர்கல்வி துறைக்கு ரூ.134.15 கோடியில் கட்டிடங்கள் முதல்வர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.